ஜார்ஜ் புஷ்சை சந்திக்க அமெரிக்கா போறாரு மன்மோகன் சிங்...
புஷ் சிங்க கூப்ட்டு..என்கூட வா..எங்க நாட்டுல டெக்னாலஜி எவ்ளோ
மூன்னேறி இருக்குன்னு காண்பிக்கிறேன்னு ஒரு காட்டுக்குள்ளே
கூட்டிக்கிட்டு போறாரு..உள்ள போனப்புறம் சிங் கையில ஒரு மண்வெட்டியக்
குடுத்து தோண்டுங்குறாரு புஷ்.
இன்னைக்கு நாந்தான் மாட்டுனேனா?...அப்டின்னு நெனச்சுட்டு
தோண்ட ஆரம்பிக்கிறாரு சிங்.ஒரு 50 அடி தோண்டுன ஒடனே கொஞ்சம்
வொயர்,ஆண்டனா எல்லம் கெடக்குது..
உடனே புஷ் சொன்னாரு பார்த்தியா..எங்க நாட்டுல 200
வருசத்துக்கு முன்னாடியே டெக்னாலஜி இவ்வளவு டெவெலப் ஆயிருச்சு
அப்டின்னாராம்..சிங்குக்கு அப்பவே கண்ண கெட்ட ஆரம்பிச்சுருச்சு..
ஒடனே வாய்யா எங்க நாட்டுக்குன்னு கையோட இழுத்துட்டு வந்து புஷ்
கையில மண்வெட்டியக் குடுத்து தோண்டுங்குறாரு...
அவரும் தோண்டு தோண்டுறாராம் தோண்டுறாராம் ஒண்ணுமே
சிக்கலியாம்...
கடுப்பாய்ட்டாரு புஷ்..என்னையா ஒன்னத்தையும் காணோம் அப்படின்னார்...
ஒடனே சிங் சொன்னாராம்...நாங்கல்லாம் அப்பவே வொயர்லெஸ் யூஸ்
பண்ண ஆரம்பிச்சுட்டோம்ல அப்படின்னு...
===================================
துணுக்ஸ்:
ஒரு சைனாக்காரன் அமெரிக்காவுல இருக்குற ஒரு பாருக்கு
போனானாம்..அப்போ அங்க நம்ம ஸ்பீல்பெர்க் தண்ணி அடிச்சுட்டு
இருந்தாரு..ஆர்வக் கோளாருல இவரு அவருட்ட போய் ஆட்டோ
கிராஃப் கொடுங்கன்னு கேட்டாரு..
சைனாக்காரன மேலயும் கீழயும் பார்த்துட்டு பளாருன்னு ஒரு அடி
கன்னத்துல விட்டாராம்..பாவம் அவன் அரண்டு போய்,ஏன் சார் என்ன
அடிச்சீங்கன்னு கேட்டன்..அதுக்கு நீங்க தான பியர்ல்ஃஹார்பர்ல குண்டு
போட்டீங்கன்னு சொன்னாரு ஸ்பீல்பெர்க்..
அந்த சைனாக்காரன் அது நாங்க இல்ல ஜப்பான் காரங்க தான் குண்டு
போட்டாங்கன்னு சொல்ல, உடனே அவர் சைனீஸ்,ஜாப்பனீஸ்,தைவானீஸ்
எல்லாரும் எனக்கு ஒன்னுதான்னு சொல்றாரு...
;
;
;
;
;
"பளார்"........
இந்த அடி விழுந்தது ஸ்பீல்பெர்க்கு...அடிச்சது சைனாக்காரன்..
நீ ஏன்டா என்ன அடிச்சன்னு அவரு கேட்க..
உங்களால் தான டைட்டானிக் கவுந்துச்சு..அதனால தான என்
சொந்தக்காரங்க நெறைய பேர் செத்துப் போய்ட்டாங்க அப்டீன்னானாம்..
அதுக்கு அவரு, அட கூமுட்ட அது ஐஸ் பெர்க்ல மோதி கவுந்து
போச்சுடா..எங்களால இல்லன்னு சொன்னாராம்..
அதுக்கு அந்த சைனாக்காரன் சொன்னானாம்..எனக்கு ஸ்பீல்பெர்க்,ஐஸ்
பெர்க்,கார்ல்ஸ்பெர்க் எல்லம் ஒன்னுதான்னு..
இது எப்படி இருக்கு?
இது அவார்டு வாங்குன ஜோக்குப்பா..அதுக்கு வேண்டியாவது சிரிச்சுருங்க
=======================================================
கல்யாணம் கட்டிக்கலாமா?..
ஒருத்தன் அவங்க அப்பாட்ட போய்,அப்ப நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு
இருக்கேன் அப்டீன்னு சொன்னான்..அதுக்கு அவரு
ரொம்பசந்தோஷம்ப்பா..பொண்ணு யாருப்பா அப்டின்னு கேட்டார்.அவனும்
பொண்ணு பேர சொன்னான்.பேரக் கேட்டதும் அப்பா முகம் சோகமா
மாறிடுச்சு..இவன் என்னப்பா பொண்ண உங்களுக்கு புடிக்கலயான்னு
கேட்டான்..அதுக்கு
அவரு அப்படி எல்லாம் இல்ல..ஆனா அவ உனக்கு தங்கச்சி முறை
வரும்டான்னு சொல்லிட்டு இந்த விஷயத்த உங்க அம்மாக்கிட்ட
சொல்லிடாதப்பான்னு கேட்டுக்கிட்டாரு..அவனும் சரின்னுட்டு இன்னொரு
பொண்ண பார்த்துட்டு இந்த பொண்ணு ஓ.கே வான்னு கேட்டான்..இப்பவும்
அவரு அதே பதிலை சொல்றாரு..இதே மாதிரி ஓவ்வரு பொண்ணுக்கும்
சொல்லிட்டே வாராரு..பையன் டென்சன் ஆயி நேர அம்மாட்டப் போய்
போட்டுக் கொடுத்துட்டான்..ஒடனே அம்மா சிரிச்சுக்கிட்டே கவலப் படாதடா
மவனே...அவரு உன் அப்பாவே இல்லன்னு சொன்னாங்களாம்..
தாக்கிட்டீங்க.
ReplyDeleteWant More fun like your jokes?
ReplyDeleteYour narration is very nice man
/ ஆட்காட்டி /
ReplyDelete/தமிழ் நெஞ்சம்/
வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே
/தங்க கம்பி/
ReplyDeleteமிக்க நன்றி
My dear chellam,
ReplyDeleteKalakkura. keep it up.
//நாங்கல்லாம் அப்பவே வொயர்லெஸ் யூஸ்
ReplyDeleteபண்ண ஆரம்பிச்சுட்டோம்ல அப்படின்னு...//
ஹா ஹா ஹா ஹா ஹா
//அனானி//
ReplyDeleteநன்றி செல்லம்
//கிரி//
வாங்க பாஸ்